துணை முதலமைச்சர்: ஓ.பன்னீர்செல்வம் நாளை தூத்துக்குடி செல்கிறார்..!!

தூத்துக்குடியில் அமைதி திரும்பியதை அடுத்து, நாளை அங்கு செல்லும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் அமைதி நிலை திரும்பியதை அடுத்து, அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று காலை 8 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது. பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை தூத்துக்குடி செல்கிறார்.

போராட்டத்தின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களையும் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து, ஆறுதல் கூற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment