குட்கா ஊழல் …!நிச்சயம் தண்டனை கிடைக்கும் …!அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கருத்து

குட்கா வழக்கில் தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி  35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 5 பேரும் வருகிற 20-ந்தேதி வரையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Image result for ஜெயக்குமார்

இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், குட்கா வழக்கில் தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.சிபிஐ விசாரணையை பொறுத்தவரை, யாரும் தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment