கர்நாடகா சட்டப்பேரவை கருத்துக்கணிப்பில் மண்ணை கவ்விய காங்.-பாஜக!அப்போம் யாருக்குத்தான் வெற்றி ?இதோ கருத்து கணிப்பு

கருக்கணிப்பு முடிவுகள்,கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கின்றன. 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 12ஆம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு ஆட்சியைக் கைப்பற்றுவதில் பா.ஜ.க.வும், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவதில் காங்கிரசும் தீவிரமாக உள்ளன.

அரியாசனம் யாருக்கு என மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் 91 இடங்களையும், பா.ஜ.க. 89 இடங்களையும் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களில் வெற்றி பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற சூழலில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவு அவசியமாகிறது என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment