கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்தது. அதற்கு முன்னதாக உருக்கமாக பேசிய எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ட்விட்டரில் கூறும்போது, “கர்நாடகாவில் ஆபரேஷன் தாமரை தோல்வி கண்டுவிட்டது. அங்கு ஜனநாயகமே வென்றது. மற்ற கட்சிகளில் இருந்து எம்எல்ஏக்களை கடத்த பாஜக முயன்றது. ஆனால் ஜனநாயகத்திடம் தோல்வி கண்டது” என்றார்.