Categories: இந்தியா

கர்நாடகாவில் “ஆபரேஷன் தாமரை “தோல்வி -காங்கிரஸ் கட்சி விமர்சனம்..!

கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்தது. அதற்கு முன்னதாக உருக்கமாக பேசிய எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ட்விட்டரில் கூறும்போது, “கர்நாடகாவில் ஆபரேஷன் தாமரை தோல்வி கண்டுவிட்டது. அங்கு ஜனநாயகமே வென்றது. மற்ற கட்சிகளில் இருந்து எம்எல்ஏக்களை கடத்த பாஜக முயன்றது. ஆனால் ஜனநாயகத்திடம் தோல்வி கண்டது” என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ட்விட்டரில் கூறும்போது, “பாவம் மிஸ்டர் எடியூரப்பா. பொம்மலாட்டக்காரர்கள் தோல்வி அடைந்துள்ளனர். பொம்மைகளும் கீழே விழுந்து உடைந்துவிட்டன” என்றார்.

ராகுல் பேட்டி:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, “கர்நாடகா விவகாரத்திலிருந்து பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாடம் கற்றுக்கொண்டன. ஊழலை ஊக்குவிக்க பிரதமர் மோடி முயற்சி செய்து வருகிறார். கர்நாடகாவில் ஜனநாயகம் தழைக்க காங்கிரஸ்-மஜத தலைவர்கள் செய்த முயற்சிக்குப் பாராட்டுக்கள்” என்றார்.

மம்தா பானர்ஜி:

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, “கர்நாடகாவில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. தேவகவுடாவுக்கும், அவரது மகன் குமாரசாமிக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்றார். – பிடிஐ

Dinasuvadu desk

Recent Posts

எங்க திட்டம் தான் எங்களுக்கு கை கொடுத்துச்சு – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி !!

Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி  வெற்றி பெற்றதை பற்றி பேசி  இருந்தார். ஐபிஎல் தொடரின்…

25 mins ago

உங்க போன் ரொம்ப ஹீட் ஆகுதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க!

Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…

37 mins ago

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

2 hours ago

காங். பிரமுகர் கொலை.! என்மீது அபாண்டமான குற்றசாட்டு… ரூபி மனோகரன் பேட்டி.

Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…

2 hours ago

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

2 hours ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

3 hours ago