எட்வர்டு ஸ்நோடென் ஆதங்கம்!ஆதார் ஆணைய அதிகாரிகளைக் கைதுசெய்யுங்கள்..

ஆதார் தகவல்கள் வெளியானது தொடர்பான விவகாரத்துக்கு, தேசிய தனிநபர் அடையாள ஆணையத்தைதான் கைதுசெய்ய வேண்டும்’ என்று எட்வர்ட் ஸ்நோடென் தெரிவித்துள்ளார்…
இந்த விவகாரம்குறித்த எட்வர்டு ஸ்நோடெனின் ட்விட்டர் பதிவில், ‘ஆதார் மீறல்களை செய்தியாளர் வெளிக்கொண்டுவந்ததற்கு அவருக்கு விருது அளிக்க வேண்டும். விசாரணை நடத்தக் கூடாது. இந்த அரசாங்கம், உண்மையில் நீதிகுறித்து அக்கறை கொண்டிருந்தால், அவர்களுடைய கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர்களுடைய கொள்கைகள் 100 கோடி இந்தியர்களின் தனியுரிமையை அழித்துவிடும். இதற்குக் காரணமானவர்களை அரசு கைதுசெய்ய வேண்டுமா? அவர்கள், தனிநபர் அடையாள ஆணையம் என்று அழைக்கப்படுவார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
source: dinasuvadu.com

Leave a Comment