2 தீவிரவாதிகளை ஜம்மு காஷ்மீரின் இருவேறு இடங்களில் சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படையினர், ஒரு தீவிரவாதியை உயிருடன் பிடித்துள்ளனர்.
அனந்த்நாக் மாவட்டம் டயல்காம் ((Dialgam)), சோபியான் மாவட்டம் கச்தூரா ((kachdoora)), டிராகத் ((dragad)) ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அந்தப் பகுதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். இந்த மூன்று இடங்களிலும் தீவிரவாதிகள் – பாதுகாப்புப் படையினர் இடையே விடிய விடிய சண்டை நடைபெற்றது.
டயல்காமில் நடைபெற்ற சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதுடன், புதிதாக அமைப்பில் சேர்ந்த ஒரு தீவிரவாதியை உயிருடன் பிடித்திருப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், அங்கு துப்பாக்கிச் சண்டை முடிவுக்கு வந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதேபோல் சோபியான் மாவட்டம் டிராகத்திலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். கச்தூரா, டிராகத் பகுதிகளில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. இதில் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு 7 முதல் 8 தீவிரவாதிகள் வரை பதுங்கி இருக்கக் கூடும் என்று கருதப்படுவதால் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு காஷ்மீரில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…