ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து சாலை மறியல்!

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து சாலை மறியல் நடைபெற்று வருகிறது. ஆர்.கே.நகர் வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் பெற்றதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். வாக்காளர்களை கமல்ஹாசன் அவமதிப்பதாக தண்டையார்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சற்று முன் தான் கமல்ஹாசன் டிடிவி தினகரன் வழக்குத் தொடர்ந்தால் அதற்கு உரிய பதில் அளிக்கப்படும் என்று நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ரஜினிகாந்திற்கு ஆதரவு தெரிவிப்பீர்களா என்று கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த கமலஹாசன், ரஜினி அரசியலுக்கு வந்ததை தாம் வரவேற்றதாகவும் அதுவே போதுமானது என்று கூறினார் என்பது குறிபிடத்தக்கது ..
source: dinasuvadu.com

Leave a Comment