அமமுக அமைப்பு செயலாளர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறார்….!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளராக உள்ள செந்தில் பாலாஜி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை தி.மு.க வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்றப்பட்டது. இதையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர் ஆவர்.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி செந்தில் பாலாஜி நாளை காலை 11 மணி அளவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணையவுள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்ட திமுக செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதில், செந்தில் பாலாஜிக்கு மாவட்ட செயலாளர் பதவி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment