அட இருப்பா..! பேசிட்டு இருக்கேன், குறுக்க பேசாதே…! கேள்வி கேட்ட அதிமுக தொண்டரை அதட்டிய முதல்வர் பழனிசாமி…!

பரப்புரையில் போது பழனிசாமியிடம் அதிமுக தொண்டர்  ஒருவர், வறட்சியான தருமபுரி மாவட்டத்திற்கு என்ன செய்தீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில், பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நாளுக்கு நாள் இடம் பெறுகிறது.

அந்த வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு அவர் பரப்புரையில் ஈடுபட்ட  போது, அதிமுக தொண்டர்  ஒருவர், வறட்சியான தருமபுரி மாவட்டத்திற்கு என்ன செய்தீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனையடுத்து, கேள்வி கேட்ட தொண்டரை, அட இருப்பா..! பேசிட்டு இருக்கேன், குறுக்க பேசாதே…! கடைசியா பேசலாம் என அதட்டினார். இதனையடுத்து கேள்வி கேட்டவரை அங்கிருந்தவர்கள் இழுத்து சென்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.