இடை தேர்தல் நடக்குமா…? நடக்காதா..? பிரசார களத்தில் இறங்கிய திமுக…!!

திருவாரூர்  இடைத்தேர்தலுக்கு நடக்குமா , நடக்காதா என்ற சூழலில் பரபரப்பாக  வாக்கு சேகரிக்கும் பணியில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவானன்.

திருவாரூர் சட்ட மன்ற தொகுதிக்கு வருகின்ற 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஜனவரி 3-ம் தேதி முதல் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகின்றது.தேர்தல் பிரசாரம் தொடங்க இருக்கும் சூழலில் திருவாரூர் இடைத்தேர்தலை இரத்து செய்ய வேண்டுமென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த அனைத்து அரசியல் கட்சி கூட்டத்திலும் திருவாரூர் இடைதேர்தல் இப்போதைக்கு நடத்த வேண்டாம் என்று  தெரிவித்ததைஎடுத்து திருவாரூர் தொகுதியில் இடைதேர்தல் நடைபெறுமா.? நடைபெற்றதா.?  என்ற சூழல் உருவாகியுள்ளது. திமுக சார்பில் திருவாரூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவானன் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வாக்கு சேகரித்து வருகின்றார்.

பிரசார வீடியோ கீழே :

author avatar
Dinasuvadu desk

Leave a Comment