உடல் எடையை குறைக்க இந்த சாற்றை வாரம் 3 முறை குடித்தாலே போதும்!

உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது மிகவும் அதிகமாகி விட்டது. அதனால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பலர் உடல் எடையை குறைக்க சாப்பிடாமல் இருக்கிறார்கள், சிலர் ஜிம்மே கதி என கிடக்கிறார்கள்.
அதனை விடுத்து நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றினாலே போதும்.

ஒரு கப் கொள்ளு ( சிறு தனியம் ) எடுத்து அதனை ஒரு சமையல் பாத்திரத்தில் போட்டு மிதமான சூட்டில் நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். பின்னர், அதனை மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். அதனுடே 5 பல் பூண்டு சேர்த்தும் நன்கு அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். அதில் இந்த பொடியை மற்றும் சிறுது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, பின்னர், வடிகட்டி குடிக்கவேண்டும்.
இந்த மருந்தை வாரம் 3 அல்லது 4 முறை குடித்தாலே போதும். எடை விரைவில் குறைய வேண்டும் என தினமும் குடித்தால் அது உடல் சூட்டை அதிகரித்துவிடும். இந்த மருந்தை எப்போது வேண்டுமானாலும் குடித்து கொள்ளலாம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.