திருமணம் ஆகி ஒருமுறை கூட தாய் வீட்டுக்கு வராத பெண்..! மகளை சாம்பலாக பார்த்த பெற்றோர் ..!

பஞ்சாப் மாநிலத்தை சார்ந்த ஐஸ்பால்சிங் இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஹர்மான்ப்ரீட்  என்ற இளம்பெண்ணை திருமணம் செய்து உள்ளார்.இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு ஐஸ்பால்சிங்போலீசாருக்கு போன் செய்து எனது மனைவி மகளுடன் தேனீர் போட சென்ற போது சிலிண்டர் விபத்து ஏற்பட்டு இருவரும் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சமையலறையில் தீவிர ஆய்வு செய்தனர்.அப்போது அங்கு உருகிய நிலையில் 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேன் கிடந்தது உள்ளது.மேலும் சிலிண்டர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தரையில் கிடந்தது உள்ளது.
இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதற்கிடையில் ஹர்மான்ப்ரீட் தந்தை போலீசாரிடம் கூறுகையில் , எனது மகளை மூன்று வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்ய ஆரம்பத்தில் இருந்து ஐஸ்பால்சிங்கும் , அவரது பெற்றோரும் துன்புறுத்தி வந்து உள்ளனர்.
மேலும் திருமணத்திற்கு பிறகு எனது மகளிடம் பேசவும் , சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. எனது மகளிடம் போன் இல்லை என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.இதை தொடர்ந்து ஐஸ்பால்சிங்கும் அவரது தந்தை இருவரின் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து உள்ளதாகவும் ,பிரேத பரிசோதனைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.

author avatar
murugan