அதிமுகவின் சசிகலா அணியில்தான் நாங்கள் உள்ளோம்- எம்எல்ஏ ரத்தினசபாபதி

அதிமுகவின் சசிகலா அணியில்தான் நாங்கள் உள்ளோம் என்று  எம்எல்ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார். 

அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இதனால் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதன் பின்னர் எம்எல்ஏ ரத்தினசபாபதி கூறுகையில்,சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளதால் நடவடிக்கை எடுக்கக்கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளோம். சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும் . அதிமுகவின் சசிகலா அணியில்தான் நாங்கள் உள்ளோம் என்று  எம்எல்ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.

author avatar
murugan

Leave a Comment