#BREAKING : தேர்தல் முடிவுகள் மாலை தான் வெளியிடப்படும் -வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கு  ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ,திமுக சார்பில் கதிர் ஆனந்த் ,நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிட்டனர்.

இன்று காலை முதலே வாக்கு எண்ணப்பட்டு வந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது. அதிமுக வேட்பாளர் மற்றும் திமுக வேட்பாளர் இடையே கடும் போட்டி நிலவியது.இந்நிலையில் தற்போது மாலை 4.30 மணிக்கு தான் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார். வேலூர்  வாணியம்பாடியில்  கடைசி 2 சுற்று  வாக்குகள் எண்ணப்பட வேண்டி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.