டிடிவி தினகரன் கணிப்பு !தமிழகத்தில் 3 மாதங்களில் ஆட்சி கவிழும்…

டிடிவி தினகரன் தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சி 3 மாதங்களில் கவிழும் என  தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் இன்று தஞ்சாவூரில் மக்கள் சந்திப்புப் பயணத்தைத் தொடங்கினார்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வழிபாடு நடத்திய பின், ஏழை எளியோருக்கு மூன்றுசக்கர வண்டிகள், தையல் எந்திரங்கள், குக்கர் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தஞ்சாவூர் மாவட்டத்தில் சத்துணவுப் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment