கைதான 2 பத்திரிக்கையாளர்கள் மாலத்தீவில் விடுவிப்பு!

மாலத்தீவு போலீசார் மாலத்தீவில் கைது செய்யப்பட்ட இரண்டு பத்திரிகையாளர்களை விடுவித்து அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக  தெரிவித்துள்ளனர்.

மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சுற்றுலா விசாவில் வந்த பத்திரிக்கையாளர்கள் இருவர் குடியேற்ற விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மணி சர்மா மற்றும் லண்டனில் குடியுரிமை பெற்ற அதிஷ் ராஜீவ் பட்டேல் ஆகிய செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை விடுவிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்தது. இதனிடையே, அவர்களை அவரவர் நாடுகளுக்கே அனுப்புவதாக மாலத்தீவு போலீசார் தெரிவித்துள்ளனர்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment