தமிழகத்திற்கு 3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கூடுதலாக வழங்க வேண்டும்-அமைச்சர் காமராஜ்

டெல்லியில்  மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான்  மற்றும் நிதியமைச்சர் நிர்மலாவை தமிழக அமைச்சர் காமராஜ் சந்தித்தார்.இதன் பின்னர் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 3 ஆயிரம் ரேஷன் பொருள் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது .ரேஷன் பொருள் கடத்தலை தடுப்பதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.தமிழகத்திற்கு 3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கூடுதலாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கான மண்ணெண்ணெயை முழுமையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.பருப்பு, பாமாயில் மானியத்தை தொடருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.