அந்த 7 பேர் விடுதலையை நெனச்சுக்கூட பாக்க முடியாது: மீண்டும் சர்ச்சை பேச்சு பேசும் சு.சுவாமி

  •  சிறையில் இருக்கும் 7 தமிழர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்…

அதிமுக, திமுக-வால் தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியாது. பா.ஜ.க.-வால் மட்டுமே மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். திமுக தேர்தல் அறிக்கை குப்பையில் போடப்பட வேண்டியது. 7 பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை என்றார்.

7 பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை என சுப்பிரமணியன் சுவாமி கூறுவது இது முதல் முறை அல்ல. ஆனால், அதிமுக-பாஜக கூட்டணி இறுதியான பின்னர் இந்த கருத்தை அவர் அடுத்தடுத்து கூறி வருகிறார்.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு பிரதான கட்சியான பாமக-வின் கோரிக்கைகளில் முக்கியமானது எழுவர் விடுதலை. அதிமுக-வும் எழுவர் விடுதலையை தங்களது தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்துள்ளது. ஆனால், பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளுக்கு புறம்பாக பேசி வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Srimahath

Leave a Comment