பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில அரசிடம் இதுவரை கருத்து கேட்கவில்லை …!அமைச்சர் ஜெயக்குமார்

பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில அரசிடம் இதுவரை கருத்து கேட்கவில்லை என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில அரசிடம் இதுவரை கருத்து கேட்கவில்லை.டெல்லியில் இன்று நடைபெறும் 32வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 60 பொருட்கள் மீதான வரியை குறைக்க தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்படும்  என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment