- இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.
- நீட் விவகாரத்தில் அதிமுக அரசு நாடகம் போடுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நாடு முழுவதும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.அந்தவகையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கியது.பின்னர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன் படி இன்று (ஜனவரி 6-ம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
இதற்கு இடையில் தமிழக அரசு சார்பில் இந்திய மருத்துவ கவுன்சில் பல் மருத்துவ கவுன்சில் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் நீட் தேர்வால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க
2 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில், அதை ரத்து செய்யக் கோரி அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வது நாணமின்றி அரங்கேற்றப்படும் நடுப்பகல் நாடகம்!நீட் மசோதாவுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற முடியாத தோல்வியை மறைக்கவா?#ADMKNEETdrama pic.twitter.com/cgokb6Ia1P
— M.K.Stalin (@mkstalin) January 5, 2020
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில், அதை ரத்து செய்யக் கோரி அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வது நாணமின்றி அரங்கேற்றப்படும் நடுப்பகல் நாடகம் ஆகும். நீட் மசோதாவுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற முடியாத தோல்வியை மறைக்கவா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.