உறைபனியால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது …!!

நீலகிரியில் அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய குளிர் காலம், நவம்பர் மாதமே தொடங்கியுள்ளது. அங்கே உள்ள  பகுதிகளில் உறை பனி பொழிவு காரணமாக புல்வெளிகள் வெண் கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கின்றது. சாலையில் செல்லும் வாகனங்களின் மேல் பனி பொழிந்துள்ளதால் அவை ஐஸ் கட்டிகளாக தெரிகின்றன. இந்த உறைபனி இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தினமும் காலை 11 மணி வரை பனிப்பொழிவு நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment