ஜம்மு காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவம்..!!

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருவது பெரும் பிரச்சனையாக இருந்து வருகின்றது. கடந்த ஆண்டில்  மட்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நிகழ்த்திய தாக்குதல்களில் 50 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் பலமுறை அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தானின் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு  இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடிக் கொடுத்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment