திமுக கூட்டணியில் பாமக இல்லாதது பெரும் பாதுகாப்பு -திருமாவளவன்

  • அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • திமுக கூட்டணியில் பாமக இல்லாதது பெரும் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் பாமக கூட்டணி தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், திமுக கூட்டணியில் பாமக இல்லாதது பெரும் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் அரசாக பாஜக அரசு உள்ளது. பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய அரசாகவே அதிமுக ஆட்சி உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment