பேரிடர் காலங்களில் மாநில அரசின் அழைப்பிற்கு முன்பே மத்திய குழு முதல்கட்ட ஆய்வு நடத்தும்

டெல்லியில்  உள்துறை  அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில்,இயற்கை பேரிடர் காலங்களில் மாநில அரசின் அழைப்பிற்கு முன்பே மத்திய குழு முதல்கட்ட ஆய்வு நடத்தும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் நடைபெற்ற உடனேயே மத்திய அரசின் நிபுணர் குழு இனி பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சேத விவரங்களை கணக்கிடும். மாநில அரசு கோரிக்கை விடுத்த பிறகு மீண்டும் ஒருமுறை நிபுணர் குழு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சென்று ஆய்வு நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.