மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது

  • சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. இன்று திமுக சார்பில் அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெற்று வருகிறது.  
  • இந்த கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடத்துவது எந்த வகையில் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்தது.இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது.இதன் பின்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக இந்த சட்டத்திற்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.அதன்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது திமுக அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

அதன்படி குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று ( ஜனவரி 24-ஆம் தேதி) தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடத்துவது எந்த வகையில் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.