இந்தியா – சீனா இடையேயான பேச்சுவார்த்தைக்கு தமிழகத்தை தேர்ந்தெடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பு நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில் இது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், அனைத்து ஏற்பாடுகளையும் சிறந்த முறையில் ஒருங்கிணைத்த அனைத்து துறை ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் .இந்த சந்திப்பின் மூலம் உலக நாடுகளின் கவனம் தமிழ்நாட்டின் பக்கம் திரும்பியுள்ளது.
இந்தியா – சீனா இடையேயான பேச்சுவார்த்தைக்கு தமிழகத்தை தேர்ந்தெடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. இரு பெரும் தலைவர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளித்த தமிழ்நாட்டு மக்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.