புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும்-செங்கோட்டையன்

புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும் .பாலியல் தொல்லை தரும் ஆசிரியர்களிடம் உரிய விசாரணை நடைபெற்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்புகளிலேயே நல்ல ஒழுக்கம் உடல் ஆரோக்கியம் பழக்கவழக்கம் பன்பாடு ஆகியவற்றை கற்றுக்கொடுக்கின்றனர்  என்றும்  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.