சுமையான பட்ஜெட் அல்ல…இது ஒரு சுவையான பட்ஜெட் ! தமிழிசை கருத்து !

மத்திய அரசு பட்ஜெட் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

நேற்று மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், சாதாரண நடுத்தர மக்களுக்கு பட்ஜெட்டாக அமைந்துள்ளது. மத்திய அரசு பட்ஜெட் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது .இந்த பட்ஜெட்டில் மகளிர் சுய உதவிக்குழு விவசாயம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.மேலும் இது ஒரு சுவையான பட்ஜெட் ,சுமையான பட்ஜெட் இல்லை.

தற்போது இந்தியாவிலும் தமிழகத்திலும் வாரிசுகளுக்கு பதவி வழங்கபட்டு வருகிறது.மேலும்  தேச துரோக வழக்கு வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது குறித்து  தமிழிசை கூறுகையில். சட்டம் தன் கடமையை செய்துள்ளது என்று கூறினார்.