பரட்டை பற்ற வைத்ததால் தமிழகம் எரிகிறது- ரஜினி குறித்து அமைச்சர் ஜெயக்குமார்

  • முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என்பார்கள், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்வார்கள் என்று கூறினார்.
  • பரட்டை பற்ற வைத்தது தமிழகம் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

துக்ளக் விழாவில் கலந்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.அப்பொழுது அவர் பேசுகையில்  பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.மேலும்,செருப்பு மாலை போடப்பட்டது என்று  ரஜினி கூறினார்.இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதன் விளைவாக ரஜினி மீது கோவை உள்ளிட்ட இடங்களில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் ரஜினிக்கு ஆதரவாக ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் துக்ளக் விழாவில்,முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என்பார்கள், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்வார்கள் என்று கூறினார்.இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,  துக்ளக் விழாவில் ரஜினி சர்ச்சை கருத்தை பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.மேலும்  பரட்டை பற்ற வைத்தது தமிழகம் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.