இலங்கை தமிழர்களின் ஆவி ஸ்டாலினை படாதபாடு படுத்தும் – அமைச்சர் ஜெயக்குமார்

  • நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
  • போராட்டம் என்ற பெயரில் மு.க.ஸ்டாலின்  ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் என்று   அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.எனவே தமிழகத்திலும் திமுக சார்பில் 23-ஆம் தேதி  பேரணி நடைபெறுகிறது.
இந்நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், 2009ல் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையை மூடி மறைக்க போராட்டம் என்ற பெயரில் மு.க.ஸ்டாலின்  ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். இலங்கை தமிழர்களின் ஆவி அவரை  படாதபாடு படுத்தும்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில், மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் ஸ்டாலின் பேசி வருகிறார்.அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு, விரிவாக விவாதித்து தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முடிவெடுக்கும் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.