ரூ.95,00,000 மோசடி : வழக்கை ஏன் எதிர்கொள்ள கூடாது?செந்தில் பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

செந்தில் பாலாஜி தமிழக அமைச்சராக இருக்கும் போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு ஓன்று தொடரப்பட்டது.இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. குற்றச்சாட்டில் முகாந்திரம் இருக்கும் நிலையில் வழக்கை ஏன் எதிர்கொள்ள கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி பதிலளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.