ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி!

டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்த இருக்கும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் நடைபெற இருக்கும் தொடர் மனித சங்கிலி போராட்டம் நடத்துவத்துவதற்கு உயர்நிதீமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
ஜூன் 23ம் தேதி மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை நடத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை மட்டுமே மனிதச் சங்கிலி போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.