புதிய உச்சத்தை தொட்ட பங்கு சந்தை !

கடந்த நான்கு நாள் வர்த்தகத்தில் குறியீடு 650 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 122.44 புள்ளிகள் உயர்ந்து 34,565.63 புள்ளிகளாக உள்ளது. சுகாதாரம், ரியல் எஸ்டேட், தொழில்நுட்பம், எண்ணெய் & எரிவாயு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18.50 புள்ளிகள் அதிகரித்து 10,655.50 புள்ளிகளாக உள்ளது.
ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, பார்தி ஏர்டெல், சன் பார்மா, அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரிட், ஐடிசி லிமிடெட், டாக்டர் ரெட்டிஸ், எஸ்பிஐ, இன்போசிஸ், என்.டி.பி.சி மற்றும் டிசிஎஸ் போன்ற நிறுவன பங்குகள் விலை 1.40% வரை உயர்ந்திருந்தது.
ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.21%, மற்றும் சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.24% உயர்ந்துள்ளபோது, ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.22% சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை புதிய உச்சத்துடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
source: dinasuvadu.com

Leave a Comment