பீகார் மாநிலம் பாட்னா அருகே பயணிகள் ரயிலில் தீவிபத்து!

பீகார் மாநிலம் பாட்னா அருகே பயணிகள் ரயிலில் தீவிபத்து!

பாட்னா-மொகாமா பயணிகள் ரயில் நேற்று இரவு மொகாமா ரயில்நிலைத்திற்கு வந்தது. அதன்பின்னர், அங்கு பயணிகளை இறக்கி விட்டு யார்டுக்கு சுத்தம் செய்ய கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், இந்த ரயிலின் பெட்டிகளில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாகப் போராடிய போதும், எஞ்சினுடன் நான்கு பெட்டிகளும் தீயில் கருகி முழுமையாக சேதமடைந்துவிட்டன.
தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு ரயில் தடம் புரண்டதில் விபத்து நேரிட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பயணிகள் யாரும் இல்லாதால் இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை..
source: dinasuvadu.com

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *