மீண்டும் இந்திய அணியில் ரவி சாஸ்திரிக்கு வாய்ப்பு !

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது ரவி சாஸ்திரி உள்ளார்.பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் , பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீ தார் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் பதவி காலம் உலகக்கோப்பை தொடருடன் முடிவடைந்து உள்ளது.இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடக்கும் தொடருக்காக இவர்களின்  பதவி காலம் 45 நாள்கள் அதிகரித்து உள்ளது.

தலைமை பயிற்சியாளராக இருக்கும்  ரவி சாஸ்திரி மீண்டும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டு உள்ளது.இதனால் மீண்டும் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருக்க அதிக வாய்ப்பு உள்ளது .

புதிய பயிற்சியாளர் பதவிக்கான விளம்பரத்தை விரைவில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட உள்ளது. 2017-ம் ஆண்டு அணில் கும்ளே  விலகியதை தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி  பதவி ஏற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan