மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணனும் அர்ஜூனனும் போன்றவர்கள்-ரஜினிகாந்த் புகழாரம்

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர்  ரஜினிகாந்த் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், சிறந்த ஆன்மீகவாதி வெங்கையா நாயுடு .தப்பி தவறி அரசியல்வாதியாக ஆகிவிட்டார் ஆவார்.எந்நேரமும் மக்களை பற்றி சிந்திப்பவர் என்று பேசினார்.

காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது.ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டது பாராட்டுக்குறியது.காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமித் ஷா நாடாளுமன்றத்தில் சிறப்பாக உரையாற்றினார்.

மேலும் மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணனும் , அர்ஜூனனும் போன்றவர்கள்.இதில் யார் கிருஷ்ணன் ?யார் அர்ஜுனன் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று  பேசினார்.