2021-ஆம் ஆண்டிலும் அதிமுக ஆட்சியை அமைக்கும்-அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இந்த 2 வருடம் கூட அதிமுகவை ஆட்சியில் இருக்க கூடாது என ஸ்டாலின் எண்ணி அரசுக்கு எதிராக அனைத்தையும் பேசி வருகிறார். அவருடைய அரசியல் வாழ்க்கை எடுத்து பார்க்கும் போது சட்டமன்றத்தில் சட்டையை கிழித்து கொண்டு வந்தவர் எனத்தான் இருக்கும்.

அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து 2021-ஆம் ஆண்டிலும் அதிமுக ஆட்சியை அமைக்கும். இந்திய பொருளாதாரம் சற்று பின்தங்கி இருப்பது உண்மைதான்.உலகமே சற்று பொருளாதாரத்தில் பின்னோக்கி உள்ளது. அதனை ஈடுகட்டும் பணியில் அரசு உள்ளது. முதலமைச்சர்  கோட் சூட் அணிந்தது குறித்த சீமானின்  கருத்துக்கு பதில் கூறுகையில்,, இடத்திற்கு ஏற்றார் போல் ஆடை அணிவது வழக்கம் தான் என்று தெரிவித்தார்.