உள்ளாட்சித் தேர்தல் -அதிமுக ஆலோசனை

  • தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. 
  • உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில்  ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதாவது டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெரும் என்று அறிவித்தது.ஆனால் மாநகராட்சி ,நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட இடங்களுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலையில்  உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, சென்னையில் இன்று  அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது .அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ,எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.