மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்களுக்கும்  மடிக்கணினி-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்களுக்கும்  மடிக்கணினி வழங்கப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற விழாவில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், அரசு பல திட்டங்களை தீட்டினாலும் அதை மாணவர்கள் மத்தியில் எடுத்துச்செல்பவர்கள் ஆசிரியர்கள்தான். தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள பிரச்சனைகளை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது.

மேலும் மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் முதலமைச்சரின் அனுமதி பெற்று மடிக்கணினி வழங்கப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.