இளவரசியின் மகனும் ஜெயா டி.வி.தலைமைச் செயலதிகாரியுமான விவேக் ஜெயராமன் ஜெயலலிதாவை மருத்துவமனையில் தான் நேரில் பார்க்கவில்லை என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஆறுமுகசாமி ஆணையம் அனுப்பிய சம்மனின் பேரில் இன்று ஆஜரான விவேக் ஜெயராமனிடம் சுமார் மூன்றரை மணிநேரம் விசாரணை நடைபெற்றது. அப்போது ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தான் வெளிநாட்டில் இருந்ததாகவும், மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவை தான் பார்க்கவில்லை என்றும் விவேக் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவேக், மீண்டும் வரும் 28ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.