திரைப்படத்தை வெளியிடுவது தான் கடினமாக உள்ளது! பிரபல நடிகர் வேதனை!

நடிகர் சசிகுமார் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர். இவர் தமிழில் சுப்பிரமணியபுரம் என்ற படத்தினை, தயாரித்து, இயக்கி நடித்துமுள்ளார். இவர் தற்போது நாடோடிகள்-2 படத்தில் நடித்துள்ளார்.

சென்னையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய சசிகுமார், திரைப்பட தயாரிப்பை விட, வெளியிடுவதே கடினமாக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், சிறு முதலீட்டு திரைப்படங்களே முதலில் வெளியிடுவது கடினமாக இருந்தது. தற்போது பெரும் முதலீட்டு திரைப்படங்களை வெளியிடுவதும் சிரமமாக தான் உள்ளது என வேதனை தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.