தமிழகத்தில் குழந்தை மற்றும் தாய்மார்களின் இறப்பு சதவீதம் குறைந்துள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் குழந்தை மற்றும் தாய்மார்களின் இறப்பு சதவீதம் குறைந்துள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், தமிழக அரசு எடுத்த சீரிய முயற்சியால் குழந்தை மற்றும் தாய்மார்களின் இறப்பு சதவீதம் குறைந்துள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக சிறந்த மாநிலத்துக்கான விருதை தமிழகம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் இதுவரை டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களால் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை .இந்த ஆண்டு டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களுக்கான அறிகுறிகள் இதுவரை தமிழகத்தில் இல்லை என்று பேசினார்.