கஜா புயல் பாதித்த மாவட்டங்களில்  மருந்து, மாத்திரைகள் வழங்க கூடுதலாக ரூ.1.40 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு…!அமைச்சர் விஜயபாஸ்கர்

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில்  மருந்து, மாத்திரைகள் வழங்க கூடுதலாக ரூ.1.40 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  கூறுகையில்,  கஜா புயல் பாதித்த மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்க கூடுதலாக ரூ.1.40 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது .மருந்து, மாத்திரைகளுக்காக இதுவரை சிறப்பு நிதி ரூ.3.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .இதுவரை 8,329 மருத்துவ முகாம்கள் மூலம் 5.43 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.நேற்று வரை 25.47 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்றும்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment