ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை எடுக்கும் 3 இயக்குனர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

தீபா தொடர்ந்த வழக்கில் இயக்குனர்கள் விஜய்,விஷ்ணுவர்தன், கவுதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்  அனுப்பியுள்ளது.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இந்த வழக்கை இன்று  விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  இயக்குனர்கள் விஜய்,விஷ்ணுவர்தன், கவுதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்  அனுப்பியுள்ளது.மேலும் நவம்பர் 14ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது உயர்நீதிமன்றம்.