கவின்-லொஸ்லியாவுக்கு திருமணமா? விளக்கமளித்த லொஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் லொஸ்லியா மற்றும் கவின் இருவரும் இருந்தனர். இந்த பிக்பாஸ் வீட்டில் இவர்கள் இருவரின் காதல் பெரிய அளவில் பேசப்பட்டது. இதற்க்கு லொஸ்லியா குடும்பத்தினர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து, இவர்கள் வெளியே வந்த பின்பும் இவர்கள் இருவரின் காதல் ரசிகர்களால் பேசப்படுகிறது. இந்நிலையில், லொஸ்லியாவிடம் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் முடிந்துள்ளது அடுத்ததாக என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த லொஸ்லியா, ‘என் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். அவர்கள் காதலித்ததை சொல்லித்தான் எங்களை வளர்த்தார்கள். அதனால் பெற்றோர் சம்மதத்துடன் என் திருமணம் நடக்கும்.’ எனக் கூறியதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.