கொரோனோவை தடுக்காவிடில் பொருளாதாரம் அழிவை சந்திக்கும் -ராகுல் காந்தி

கொரோனோவை தடுக்காவிடில் பொருளாதாரம் அழிவை சந்திக்கும் -ராகுல் காந்தி

Default Image

கொரோனோவை தடுக்காவிடில் பொருளாதாரம் அழிவை சந்திக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

சீனாவில்  கொரோனா வைரஸ் பரவியது.நாளடைவில் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா வரை பரவியுள்ளது.

இந்நிலையில் கொரோனா குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதவியில்,நாட்டின் பொருளாதாரத்திற்கு கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அச்சுறுத்தல். வலுவான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் நாட்டின் பொருளாதாரம் அழிவை சந்திக்கும் என்று தெரிவித்துள்ளார். 

Join our channel google news Youtube