கருணாநிதி போல் பேசவோ, எழுதவோ தெரியாது- மு.க.ஸ்டாலின்

கருணாநிதி போல் பேசவோ, எழுதவோ தெரியாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  கூட்டாட்சி அமைப்பு முறையை தான் திமுக வலியுறுத்தி வருகிறது .அரசியலமைப்பு சட்ட முகப்பில் உள்ள அடிப்படை பண்புகளை சிதைக்க ஒப்புக்கொள்ளாது .மாநில அரசின் சில அதிகாரங்களை மத்திய அரசு தன் கைவசம் வைத்துள்ளது.
என்னுடைய சக்தியையும் தாண்டி நான் உழைத்து வருகிறேன் .எனக்கு கருணாநிதி போல் பேசவோ, எழுதவோ தெரியாது.எதையும் முயற்சி செய்யும் துணிவு உண்டு.
வெற்றி சாதாரணமாக கிடைக்காது. கிடைக்கவும் விட மாட்டார்கள் ஒற்றுமையின்றி உழைத்தால் வெற்றி கிடைக்காது. மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பேசினார்.