எப்பாடுபட்டாவது தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது திமுகவின் கொள்கை- அமைச்சர் ஜெயக்குமார் 

  • உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
  • உள்ளாட்சி தேர்தல் எப்போது என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார். 

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது .அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ,எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் ,உள்ளாட்சி தேர்தல் எப்போது என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் .உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் அதிமுக வெற்றி பெறும்.

தேர்தலை பொறுத்தவரை சூப்பர் ஃபாஸ்ட் கட்சி என்றால், அது அதிமுகதான். எப்பாடுபட்டாவது உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது திமுகவின் கொள்கை என்று அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.