திமுக பேரணி எதிரொலி-போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை

  • குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாளை பேரணி நடைபெறுகிறது.
  • போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது .

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த சட்டம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிகள் சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாளை பேரணி நடைபெறுகிறது.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாளை எதிர்க்கட்சிகள் பேரணி நடத்த இருக்கும் நிலையில் சென்னை  மாநகர போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக  மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.மேலும் வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் இருப்பவர்களும் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என்று போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளார்.