தமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு

தமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.பிப்ரவரி 24-ஆம் தேதி உள்துறை அமைச்சரை விமர்சித்த வழக்கில் ஆஜராகவும்,மார்ச் 4-ஆம் தேதி முதலமைச்சர் மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக அரசை விமர்சித்த வழக்கில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.